சனி, 25 ஜூன், 2011

இந்த பூமி பந்தின் துணையோடு சூரியனை 38 வது முறையாக மீண்டும் சுற்றிவர ஆரம்பிக்கும் இந்த நாளில் என்னை வாழ்த்துகின்ற  எனதினிய முகநூல் தோழமைகள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த நன்றிகள். 

செவ்வாய், 21 ஜூன், 2011

27 நட்சத்திரங்களுக்குரிய திருத்தலங்கள்


27 நட்சத்திரங்களுக்குரிய திருத்தலங்கள்: புகைபடத் தொகுப்பு: ஆன்மீக நண்பர்களுக்காக.


                                                        27 நட்சத்திரங்களுக்குரிய திருத்தலங்கள்

ஆன்மீக நண்பர்களின் நலம் கருதி , ஒவ்வொரு நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கும் உரிய திருத் தலங்களைப் பற்றி இங்கே கொடுத்துள்ளோம். இங்கு உள்ள ஸ்தலங்கள் அனைத்தும் , பலப்பல யுகங்கள் வரலாறு கொண்டவை. இடையில் அழிவு ஏற்பட்டாலும், அதன் பிரதி பிம்பங்களாய் தன்னையே புதுப்பித்துக் கொண்டவை.  எத்தனையோ மகான்களும், ரிஷிகளும், தேவர்களும் வழிபட்ட, இன்றளவும் நல்ல ஆன்மீக அதிர்வுகளைக் கொண்டு, தரிசிக்க வரும் பக்தர்களுக்கு அருள் பாலிப்பவை.

இவையெல்லாவற்றையும் விட முக்கியமான ரகசியம் - இந்த நட்சத்திரங்களுக்குரிய தேவதைகள் , சூட்சும ரீதியாக இங்கே தினமும் ஒரு தடவையாவது தங்களுக்குரிய ஆலயம் சென்று வழிபாடு செய்கின்றன.

மனிதராய் பிறந்த அனைவர்க்கும், அவரவர்  கர்ம வினையே -  லக்கினமாகவும், ஜென்ம நட்சத்திரமாகவும், பன்னிரண்டு வீடுகளில் நவக் கிரகங்கள் அமர்ந்து -  பெற்றெடுக்கும் பெற்றோர்களையும், பிறக்கும் ஊரையும்,  வாழ்க்கை துணையையும் , அவர் வாழ்வில் நடக்கும் முக்கிய சம்பவங்களையும் , வாழ்க்கையையுமே தீர்மானிக்கிறது. நமது பூர்வ ஜென்ம தொடர்புடையஆலயங்களுக்கு, நம்மை அறியாமலே நாம் சென்று வழிபடும்போது,  நமது கர்மக்கணக்கு நேராகிறது. அப்படி நிகழும்போது நம் வாழ்வில் ஏற்படும் பல தடைகளும், தீராத பிரச்னைகளும் தீர்ந்து , மனதளவில் நமக்கு பலமும், மாற்றமும் ஏற்படுகின்றன.

கீழே கொடுக்கப்பட்டுள்ள அவரவர்க்குரிய நட்சத்திர தலத்தை  -  உங்கள் ஜென்ம நட்சத்திரம் வரும் தினத்தன்று , ஆத்ம சுத்தியுடன், நம்பிக்கையுடன் வழிபட்டு வாருங்கள். அதன் பிறகு உங்கள் வாழ்வில் நிச்சயம் ஒரு புது வெளிச்சம் பிறக்கும்.உங்களால் முடிந்தவரை வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் சாதாரண தினங்களில் கூட  இந்த ஆலயங்களில் சென்று வழிபட்டு வர , உங்கள் கஷ்டங்கள் வெகுவாக மட்டுப்படும். 


அஸ்வினி - அருள்மிகு பிறவி மருந்தீஸ்வரர் திருக்கோயில்
இருப்பிடம்: திருவாரூரில் இருந்து 30 கி.மீ.தூரத்தில் திருத்துறைப் பூண்டி உள்ளது. பஸ் ஸ்டாண்டில் இருந்து ஒரு கி.மீ. தூரத்தில் கோயில் உள்ளது.
பரணி - அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோயில்
இருப்பிடம்: மயிலாடு துறையிலிருந்து(15 கி.மீ.)நெடுங்காடு வழியாக காரைக்கால் செல்லும் வழியில் நல்லாடை என்னும் ஊரில்  உள்ளது.
கார்த்திகை - அருள்மிகு காத்ர சுந்தரேஸ்வரர் திருக்கோயில்
இருப்பிடம்:  மயிலாடுதுறையிலிருந்து பூம்புகார் செல்லும் வழியில் 8 கி.மீ., தூரத்தில் கஞ்சாநகரம் அமைந்துள்ளது. மெயின் ரோட்டிலிருந்து பிரியும் ரோட்டில் அரை கி.மீ., சென்றால் கோயிலை அடையலாம்.
ரோஹிணி -  அருள்மிகு பாண்டவதூதப்பெருமாள் திருக்கோயில்
இருப்பிடம்: காஞ்சிபுரம் ஏகாம் பரேஸ்வரர் கோயில் எதிரில் உள்ள சாலையில் கோயில் அமைந்துள்ளது.
மிருக சீரிஷம் -  அருள்மிகு ஆதிநாராயணப்பெருமாள் திருக்கோயில்
இருப்பிடம் : தஞ்சாவூரிலிருந்து திருவாரூர் செல்லும் வழியில் 50 கி.மீ., தூரத்தில்
முகூந்தனூர் உள்ளது. இந்தஸ்டாப்பில் இருந்து, ஒரு கி.மீ. தூரம் சென்றால் கோயிலை அடையலாம்.
திருவாதிரை - அருள்மிகு அபய வரதீஸ்வரர் திருக்கோயில்
இருப்பிடம் : தஞ்சாவூரில் இருந்து 70 கி.மீ., தூரத்திலுள்ளபட்டுக்கோட்டை சென்று, அங்கிருந்து 12 கி.மீ. சென்றால் அதிராம்பட்டினத்தில் உள்ள இந்த ஆலயத்தை அடையலாம்.
புனர் பூசம் - அருள்மிகு அதிதீஸ்வரர் திருக்கோயில்
இருப்பிடம் : வேலூரிலிருந்து கிருஷ்ணகிரி செல்லும் வழியில், 67 கி.மீ., தூரத்தில் வாணியம்பாடி உள்ளது. பஸ்ஸ்டாண் டில் இருந்து 3 கி.மீ. தூரத்தில் உள்ள பழைய
வாணியம் பாடியில் கோயில் உள்ளது.
பூசம் - அருள்மிகு அட்சய புரீஸ்வரர் திருக்கோயில்
இருப்பிடம்: பட்டுக்கோட்டையிலிருந்து ராமேஸ்வரம் செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் 30 கி.மீ., சென்றால் விளங்குளம் விலக்கு வரும். அங்கிருந்து தெற்கே 2 கி.மீ. சென்றால் கோயிலை அடையலாம். புதுக்கோட்டையில் இருந்து பேராவூரணி வழியாகவும் விளங்குளத்தை அடைய வழியிருக்கிறது. 
ஆயில்யம் - அருள்மிகு கற்கடேஸ்வரர் திருக்கோயில்
இருப்பிடம்: கும்பகோணத்தில் இருந்து சூரியனார் கோவில் செல்லும் ரோட்டில் 11 கி.மீ., தூரத்தில் உள்ள திருவிசநல்லூர் சென்று, அங்கிருந்து பிரியும் ரோட்டில் 2கி.மீ., சென்றால் கோயிலை அடையலாம். திருவிசநல்லூரில் இருந்து ஆட்டோ வசதி உண்டு
மகம் - அருள்மிகு மகாலிங்கேஸ்வரர் திருக்கோயில்
இருப்பிடம்: திண்டுக்கல்லில் இருந்து நத்தம் செல்லும் ரோட்டில் 12 கி.மீ., தூரத்தில் விராலிப்பட்டி விலக்கு உள்ளது. இங்கிருந்து 2 கி.மீ., மினிபஸ்சில் சென்றால் கோயிலை அடையலாம். ஆட்டோ வசதியும் உண்டு.
பூரம் - அருள்மிகு ஸ்ரீஹரி தீர்த்தேஸ்வரர் திருக்கோயில்
இருப்பிடம்: புதுக்கோட்டையிலிருந்து பட்டுக்கோட்டை செல்லும் வழியில் 7 கி.மீ., சென்றால் வரும் திருவரங்குளம் என்னும் ஊரில் ஆலயம் உள்ளது.
உத்திரம் - அருள்மிகு மாங்கல்யேஸ்வரர் திருக்கோயில்
இருப்பிடம் : திருச்சி சத்திரம் பஸ்ஸ்டாண்டிலிருந்து 22 கி.மீ. தூரத்திலுள்ள லால்குடி சென்று அங்கிருந்து 5 கி.மீ. தூரத்திலுள்ள இடையாற்று மங்கலம் என்னும் ஊரில் உள்ளது.
ஹஸ்தம் - அருள்மிகு கிருபா கூபாரேச்வரர் திருக்கோயில்
இருப்பிடம்: கும்பகோணத்திலிருந்து மயிலாடுதுறை செல்லும் வழியில் உள்ள குத்தாலத்திலிருந்து பிரியும் ரோட்டில் 8 கி.மீ. தூரத்தில் கோமல் என்னும் ஊரில் உள்ளது.குத்தாலத்திலிருந்து பஸ், ஆட்டோ வசதி உள்ளது
சித்திரை - அருள்மிகு சித்திரரத வல்லபபெருமாள் திருக்கோயில்
இருப்பிடம்: மதுரையில் இருந்து 23 கி.மீ., தூரத்திலுள்ள குருவித்துறைக்கு மதுரை பெரியார் பஸ் ஸ்டாண்டிலிருந்து பஸ் உள்ளது. குருவித்துறையில் இருந்து 3 கி.மீ. தூரத்தில் கோயில் உள்ளது. வியாழன், பவுர்ணமி தினங்களில்  கோயில் வரை பஸ்கள் செல்லும். மற்ற நாட்களில் ஆட்டோவில் செல்ல வேண்டும்.
சுவாதி - அருள்மிகு தாத்திரீஸ்வரர் திருக்கோயில்
இருப்பிடம்: சென்னை பூந்தமல்லியில் இருந்து தண்டுரை என்ற ஊருக்கு செல்லும் வழியில் 8 கி.மீ., தூரத்தில் சித்துக்காடு என்ற ஊரில் இத்தலம் உள்ளது. குறித்த நேரத்தில் மட்டுமே பஸ் உண்டு என்பதால், பூந்தமல்லியில் இருந்து வாகனங்களில் சென்று திரும்பலாம்
விசாகம் - அருள்மிகு முத்துக்குமாரசுவாமி திருக்கோயில்
இருப்பிடம் : மதுரையில் இருந்து 155 கி.மீ., தொலைவிலுள்ள செங்கோட்டை சென்று, அங்கிருந்து 7 கி.மீ., தூரத்திலுள்ள திருமலைக்கோவிலை பஸ் மற்றும் வேன்களில் அடையலாம். இவ்வூரைச் சுற்றி பிரபல ஐயப்ப ஸ்தலங்களான ஆரியங்காவு, அச்சன் கோவில், குளத்துப்புழை ஆகியவை உள்ளன
அனுஷம் - அருள்மிகு மகாலட்சுமிபுரீஸ்வரர் திருக்கோயில்
இருப்பிடம்: மயிலாடுதுறையில் இருந்து சீர்காழி செல்லும் வழியில் 7 கீ.மீ. தூரத்தில் திரு நின்றியூர் என்னும் ஊரில் இத்தலம் அமைந்துள்ளது.
கேட்டை - அருள்மிகு வரதராஜப்பெருமாள் திருக்கோயில்
இருப்பிடம்: தஞ்சாவூரில் இருந்து கும்பகோணம் செல்லும் வழியில் 13 கி.மீ., தூரத்திலுள்ள பசுபதிகோயில் பஸ் ஸ்டாப்பில் இருந்து அரை கி.மீ., தூரத்தில் கோயில் உள்ளது.

மூலம் - அருள்மிகு சிங்கீஸ்வரர் திருக்கோயில்
இருப்பிடம்: சென்னை கோயம்பேட்டில் இருந்து தக்கோலம் செல்லும் வழியில் 45 கி.மீ., தூரத்தில் மப்பேடு என்ற ஊரில்  உள்ளது. (பூந்தமல்லியிலிருந்து (22 கி.மீ.) பேரம்பாக்கம் செல்லும் வழியில் மப்பேடு உள்ளது.)
பூராடம் -  அருள்மிகு ஆகாசபுரீஸ்வரர் திருக்கோயில்
இருப்பிடம்: தஞ்சாவூரில் இருந்து (13 கி.மீ.,) திருவையாறு சென்று, அங்கிருந்து கல்லணை செல்லும் வழியில் 4 கி.மீ., தூரம் சென்றால் கடுவெளியை அடையலாம். பஸ் ஸ்டாப் அருகிலேயே கோயில் அமைந்துள்ளது.
உத்திராடம் - அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில்
இருப்பிடம்: சிவகங்கையில் இருந்து காரைக்குடி செல்லும் வழியில் உள்ள (12 கி.மீ.,) ஒக்கூர் சென்று, அங்கிருந்து பிரியும் ரோட்டில் 3 கி.மீ., சென்றால் பூங்குடி என்ற ஊரில் உள்ளது. ஆட்டோ உண்டு. மதுரையில் இருந்து (45 கி.மீ.,) இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை நேரடி பஸ் வசதி உண்டு.
திருவோணம் -  பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் கோயில்
இருப்பிடம்: வேலூரிலிருந்து சென்னை செல்லும் வழியில் 20 கி.மீ., தூரத்திலுள்ள
காவேரிப்பாக்கத்தில் இறங்கி, அங்கிருந்து பிரியும் ரோட்டில் 2 கி.மீ. சென்றால் திருப்பாற் கடலை அடையலாம். ஆற்காடு, வாலாஜா விலிருந்தும் பேருந்துகள் உள்ளன. இவ்வூரில் இரண்டு பெருமாள் கோயில்கள் இருப்பதால், பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் கோயில் என கேட்டு செல்லவும்
அவிட்டம் - அருள்மிகு பிரம்மஞான புரீஸ்வரர் திருக்கோயில்
இருப்பிடம் : கும்பகோணம் மகாமகக்குளம் மேற்குக் கரையிலிருந்து 4 கி.மீ. தூரத்தில் கோயில்அமைந்துள்ளது. கும்பகோணத்திலிருந்து தாராசுரம், முழையூர் வழியாக மருதாநல்லூர் செல்லும் பஸ்களில் கொருக்கை என்னும் இடத்தில் உள்ளது..
சதயம் -  அருள்மிகு அக்னிபுரீஸ்வரர் திருக்கோயில்
இருப்பிடம்: திருவாரூர் மாவட்டம், நன்னிலத்திலிருந்து நாகப்பட்டினம் செல்லும் வழியில் 10 கி.மீ. தொலைவில் திருப்புகலூர் என்னும் ஊரில் உள்ளது.
பூரட்டாதி - அருள்மிகு திருவானேஷ்வர் திருக்கோயில்
இருப்பிடம்: திருவையாறிலிருந்து 17 கி.மீ. தூரத்தில் உள்ள திருக் காட்டுப்பள்ளி சென்று, அங்கிருந்து அகரப் பேட்டை செல்லும் ரோட்டில் 2 கி.மீ. தூரம் சென்றால் ரங்கநாதபுரம் என்னும் ஊரில் உள்ளது.
உத்திரட்டாதி - அருள்மிகு சகஸ்ரலட்சுமீஸ்வரர் திருக்கோயில்
இருப்பிடம்: புதுக்கோட்டையில் இருந்து 40 கி.மீ.தூரத்திலுள்ள ஆவுடையார்கோவில் சென்று, அங்கிருந்து திருப்புவனவாசல் செல்லும் வழியில் 21 கி.மீ தூரத்தில் தீயத்தூர் உள்ளது.  மதுரையில் இருந்து செல்பவர்கள், அறந்தாங்கி சென்று, அங்கிருந்து திருப்புவனவாசல் செல்லும் பஸ்களில் சென்றால் தீயத்தூர் என்னும் இடத்தில் உள்ளது. தூரம் 120 கி.மீ.
ரேவதி - அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில்
இருப்பிடம்: திருச்சியிலிருந்து முசிறி (40கி.மீ)சென்று, அங்கிருந்து வேறு பஸ்களில் தாத்தய்யங்கார் பேட்டை(21 கி.மீ) செல்ல வேண்டும். இங்கிருந்து 5 கி.மீ.தூரத்திலுள்ள காருகுடி என்னும் இடத்தில் உள்ளது.

உங்களால் முடிந்தவரை வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் சாதாரண தினங்களில் கூட  இந்த ஆலயங்களில் சென்று வழிபட்டு வர , உங்கள் கஷ்டங்கள் வெகுவாக மட்டுப்படும். வாழ்க வளமுடன், நீண்டநாள் நலமுடன்...

என்றும் அன்புடன் சே.பா. சபரிராஜ் M.A.,M.Phil.,

பதிவிற்கு உதவிய முகநூல் நண்பர் கே எம் தர்மா அய்யா அவர்களுக்கு நன்றிகள் பல உரித்தாகுக .
 ·  · Share

வியாழன், 9 ஜூன், 2011

மாம்பழம் சாப்பிட வாங்க 
எங்கள் தோட்டத்து மாம்பழம் 

சந்தையில் கிடைக்கும் மாங்காய்களை
வாங்கி பழுக்க வைத்து சாபிட்டால் நல்லது 

விரைவாக பழுப்பதற்காக விஷ தன்மையுள்ள 
வேதியல் பொருட்கள்  பயன்படுதப் படுகிறது. 




கவனம். நண்பர்களே. 

சனி, 4 ஜூன், 2011



எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்


“எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்” என ஓளவையாரும், “எண் என்ப ஏனை எழுத்தென்ப இரண்டும் கண் என்ப வாழும் உயிர்க்கு” என திருவள்ளுவரும் எண்களின் முக்கியத்துவத்தை தங்கள் பாடல்களில் குறித்துக் காட்டியுள்ளனர்.

உலகின் பல மொழிகளுக்கு சொந்தமாக எண்கள் எதுவுமே இருந்ததில்லை. ஆரம்ப காலத்தில் பல மொழிபேசும் மக்கள் எண்களைப் பற்றி தெளிவான கருத்தோட்டம் இல்லாதவர்களாகவே வாழ்ந்துவந்தனர். இன்று உலகம் முழுவதும் பயன்பாட்டில் உள்ள இந்து அராபிய எண்களின் அறிமுகத்துக்குப் பின்னரே எண்கள் பற்றிய மிகத் தெளிவான வரையறைகள் வகுக்கப்பட்டன. இந்த இந்து அராபிய எண்களின் தோற்றுவாய் தமிழ்தான் என்பதை தெரிந்துகொள்ளும்போது ஏற்படும் மகிழ்சி மட்டற்றது.

ஆதிகாலம் முதல் தமிழ் மக்களிடையே எண்கள், கணிதம், கால-நேர அவவைகள் பற்றி தெளிவான அறிவு நிரம்பியிருந்தது. சங்கநூல்களில் இந்த எண் அளவைகள் பற்றி பலப் பல குறிப்புகள் காணப்படுகின்றன. கணியன் பூங்குன்றனார், கணக்காயன் தத்தனார், மதுரைக் கணக்காயனார், கணியாதனார் என்ற சங்ககால புலவர்களின் பெயர்களே இவற்றுக்கு சாட்சி எனலாம். தொல்காப்பியம் முதல் அகநானூறு, புறநானூறு என சங்கநூல்களில் எல்லாம் கணிதம் பற்றியும் எண்கள் பற்றியும் ஏராளமான சொற்கள் ஆங்காங்கு விரவிக்கிடக்கின்றன.

திருவள்ளுவர் திருக்குறளில் ஒன்று என 11 இடங்களிலும், இரண்டை 10 இடங்களிலும், நான்கை 11 இடங்களிலும், ஐந்தை 14 இடங்களிலும், ஆறு என்ற எண்ணை ஒரு இடத்திலும், ஏழு என 7 இடங்களிலும், எட்டு, பத்து, ஆயிரம் என்பவற்றை ஒவ்வொரு குறள்களிலும், கோடியை 7 இடங்களிலும், பாதியை (அரை) ஒரு இடத்திலும், காற்பாகம் (கால்) என ஒரு குறளிலும் எழுதியுள்ளார்.

“ஒரூ கை, இரூ கை மாஅல் ! முக் கை முனிவ! நாற் கை அண்ணல்!
ஐங் கைம் மைந்த! அறு கை நெடு வேள்! எழு கையாள! எண் கை ஏந்தல்!
ஒன்பதிற்றுத் தடக் கை மன் பேராள! பதிற்றுக் கை மதவலி! நூற்றுக் கை ஆற்றல்!
ஆயிரம் விரித்த கைம் மாய மள்ள! பதினாயிரம் கை முதுமொழி முதல்வ!
நூறாயிரம் கை ஆறு அறி கடவுள்! அனைத்தும் அல்ல பல அடுக்கல் ஆம்பல்
இனைத்து என எண் வரம்பு அறியா யாக்கையை!” என பரிபாடலில் (3/ 34-45) தமிழ் எண்கள் 1-10 வரைக்கும் வரிசையாக கூறப்பட்டு தொடர்ந்து 100, 1000, 10000, 100000 என 100000000000000 எனும் எண் (ஆம்பல் - hundred trillion) வரை விபரிக்கப்படுவதை காணலாம். அதே பரிபாடலில்

“ஒரு நிழல் ஆக்கிய ஏமத்தை மாதேர்
பாழ் என, கால் என, பாகு என, ஒன்று என,
இரண்டு என, மூன்று என, நான்கு என, ஐந்து என,
ஆறு என, ஏழு என, எட்டு என, தொண்டு என,
நால்வகை ஊழி எண் நவிற்றும் சிறப்பினை” என வரும் பரிபாடலின் (3/ 76-80) அடிகளால் தமிழ் எண்கள் 0, 1/4, ½, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 என வரிசைப்பபடுத்திக் காட்டப்படுகின்றன. மேலும் தொண்டு மற்றும் ஒன்பதிற்று எனும் சொற்களும் இலக்கம் ஒன்பதை குறிக்கவே சமகாலத்தில் பயன்படுத்தப்பட்டன என்பது புலனாகும்.

இவற்றிலிருந்து கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலத்திலேயே தமிழ் எண்கள் வழக்கில் இருந்ததை நாம் அறியமுடிகிறது. தற்போது நாம் பூச்சியம் என்று சொல்வதன் திருத்தமான தமிழ் சொல் பாழ் ஆகும். பாழ் என்றால் எதுவுமற்ற வெறுமை என அர்த்தம். பாழ் என்ற தமிழ் சொல்லிலிருந்தே ழகர உச்சரிப்பு இல்லாமையால் பூஜ்யம் என்கின்ற வடமொழி சொல் (பாழ்-அம்… பாழ்ச்-அம்… பூஜ்அம்..)  தோன்றிற்று. என்பர். பாழ் என்பதற்கு தமிழில் சுழி எனவும் வேறொரு சொல் குறிக்கப்படுவதுண்டு. சுழி என்றால் சுழிக்கப்பட்ட வெற்று வளையம் என பொருள்படும். இதிலிருந்தே சூன்யம் என வடமொழி சொல் தோன்றியது என்பர். சூன்யம் என்பதிலிருந்தே அராபியமொழியூடாக ஐரோப்பிய மொழிகளுக்கு “Cyber” என்பதுவும், “Zero” என்பதுவும் தோற்றம் பெற்றன.

தமிழில் ஒன்று என்று அழகாக நாம் உச்சரிக்கும் சொல்தான் இன்றைய ஆங்கிலத்தில் “One” என மாற்றம் பெற்றுள்ளதை நாம் அறிந்துகொள்ளலாம். இது நேரடியாக தமிழிலிருந்து அரபுக்கு சென்று (ஒ-அ-ஹித் uâhid – அரபு மொழி) அங்கிருந்து ஐரோப்பியர்களிடையே நுழைந்தது. இதுபோலவே இரண்டு என்பதும் அரேபியர்கள் ஊடாக (இத்-னாதான்  ithnatân - அரபு மொழி) ஐரோப்பாவை அடைந்து முடிவில் ஆங்கிலத்தில் Two என வடிவம் பெற்றது.

இரண்டு (துளிர்) – துவி (வடமொழி) – Two (ஆங்கிலம்)
மூன்று (திரி) - திரி (வடமொழி) -  – Three (ஆங்கிலம்)
நான்கு (சட்டகம்) -சதுர் /சார் (வடமொழி) – பார் /அர் பார் (அரபுமொழி)– Four (ஆங்கிலம்)
ஐந்து – பஞ்ச (வடமொழி) – Five (ஆங்கிலம்)
ஆறு - ஷஷ்ர (வடமொழிக்கு மொழிபெயர்த்ததால்) – Six (ஆங்கிலம்)
ஏழு - ஸப்த (வடமொழிக்கு மொழிபெயர்த்ததால்) - Seven (ஆங்கிலம்)
எட்டு  - அட்ட (வடமொழி) - Eight (ஆங்கிலம்)
ஒன்பது (தொண்டு) – நவ (வடமொழிக்கு மொழிபெயர்த்ததால்) – Nine (ஆங்கிலம்)
பத்து (பல்து / பஃது) – தச (வடமொழிக்கு மொழிபெயர்த்ததால்) – Ten (ஆங்கிலம்)

தமிழ் எண்கள் பிறமொழிகளில் உச்சரிக்கப்படும் விதத்தை பார்க்கும்போது அவை இரண்டு விதமாக அந்த மொழிகளுக்கு போய்ச் சேர்ந்திருப்பதை நாம் காணலாம். ஒன்று நேரடி தமிழ் உச்சரிப்பு திரிபடைந்து பிறமொழிகளில் அவர்களது உச்சரிப்புக்கு ஏற்ற வகையில் மாற்றமுற்ற வடிவம். மற்றையது எண்களுக்குரிய தமிழ் சொல்லில் அர்த்தத்தை நேரடியாக பிற மொழிக்கு மொழிபெயர்ப்பு செய்ததன் விளைவாக தோற்றம் பெற்ற எண் பெயர்கள் ஆகும். இவ்வாறான சொற் பிறப்புகள் பொதுவாக அனைத்து மொழிகளிலும் காணப்படுகின்றன.

தமிழிலும், வடமொழியிலும் பல சொற்கள் பொதுவான உச்சரிப்பு, மற்றும் பொருள் விளக்கத்துடன் காணப்படுகின்றன. எந்த மொழியிலிருந்து எந்த சொல், எந்த மொழிக்கு இரவல் பெறப்பட்டது என்பதுவும் அறியமுடியாததொன்றாகவே இருந்துவருகிறது. இது இவ்விரு மொழிகளும் ஒரே மூலத்திருந்து அல்லது ஓரே மக்கள் கூட்டத்திலிருந்து தோற்றம் பெற்று இரு வேறு கிளைகளாக வளர்ச்சியுற்றதையே காட்டி நிற்கின்றது எனலாம். எனினும் மொழி அமைப்புகள், மொழி தோற்றுவாய், இனத் தோற்றுவாய் என்பவற்றை அடிப்படையாக வைத்து ஆய்வு செய்த பல அறிஞர்களினதும் கருத்து தமிழே முதலில் தோன்றிய மொழி என்பதாகும். சிந்துவெளி மக்கள் பயன்படுத்தியது தமிழின் தொன்மை வடிவத்தையே எனவும், பின்னாளில் உள் நுழைந்த ஆரியர்கள் கலப்பால் வடமொழி தோற்றம் பெற்றது எனவும் தமிழ் ஆய்வாளர்கள் பலரும் தெரிவிக்கின்றனர்.






நன்றி முகநூல் நண்பர் ப்ரிய சிநேகன்