மனிதர்களில் பலர், அதிலும் குறிப்பாக இந்தியர்களுள் அதிகப்படியானோர் சர்க்கரை வியாதியால் அவதிப்படுவது மிகவும் பிரசித்தமானதொரு செய்தியாகும். உண்மையில் சர்க்கரை வியாதி என்பது என்ன?
நாம் உண்ணும் உணவில் உள்ள சர்க்கரைச் சத்துக்கள் ரத்தத்தில் கலந்து உடலில் உள்ள ஒவ்வொரு செல்லுக்கும் கொண்டு செல்லப்படுகையில் அவற்றுள் நல்ல சத்துக்கள் மட்டும் செல்லுக்குள் செல்ல அனுமதிக்கப் படுகின்றன. நல்லவையல்லாதவை ரத்தத்திலேயே தொடர்ந்து கொண்டு செல்லப்பட்டு சிறுநீர் வழியாக உடலிலிருந்து வெளியேற்றப்படுகின்றன. நல்ல சர்க்கரைச் சத்தாவது நாம் உண்ணும் உணவில் செரிமானமாகும் பகுதியிலுள்ள சர்க்கரைச் சத்தாகும். நல்லவையல்லாதவை செரிமானமாகாத உணவில் உள்ளனவாகும். இதற்குக் காரணம் நல்ல சர்க்கரைச் சத்துக்கு மட்டும் தேவையான அளவிலேயே இன்சுலின் சுரக்கிறது. நல்லவையல்லாத சர்க்கரையின் அளவு ரத்தத்தில் அதிகாரிக்கையில் அது வியாதியாகக் கருதப்படுவதனாலேயே மாத்திரைகளும் இன்சுலின் ஊசி மருந்தும் மருத்துவர்களால் அறிவுறுத்தப் படுகின்றன.
நாம் உண்ணும் உணவு முழுவதும் செரிமானம் செய்ய எத்தகைய உணவுப் பழக்க வழக்கங்களும் கட்டுப்பாடும் உதவுமோ அவற்றைக் கண்டறிந்து செயல்படுத்தினால் சர்க்கரை வியாதி வராது. ஏற்கெனவே வந்த சர்க்கரை வியாதியும் குணமாகி விடும். இப்பரம ரகசியத்தை நான் அறிந்து கடைபிடித்துப் பலனடைந்த விவரத்தை யாவரும் அறிய விரும்பி எடுத்துரைக்க விழைகிறேன்.
இதன் பின்னர் உணவில் கட்டுப்பாட்டைக் கடைபிடித்து, புகை பிடிப்பதை மிகவும் குறைத்துக் கொண்டு, தினமும் தவறாமல் நடைப்பயிற்சியும் உடற்பயிற்சியும் மேற்கொண்டு வந்தேன். இருப்பினும் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாகவே இருந்து வந்ததால் தொடர்ந்து மாத்திரைகள் உட்கொண்டு வந்தேன். சுமார் ஒரு வருடத்திற்கு முன்பிருந்து தமிழகத்தில் தமிழக அரசின் முயற்சியால் பல்வேறு ஆலயங்களிலும் யோகாசனப் பயிற்சி தரப்பட்டு வருகிறது. அதன்படி காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் ஆலயத்தில் அருட்தந்தை வேதாத்திரி மகரிஷியால் அமையப் பெற்ற மனவளக் கலை மன்றத்தைச் சேர்ந்த யோகாசனப் பயிற்சியாளர்களைக் கொண்டு யோகப் பயிற்சி அளிக்கப் பட்டு வருகிறது. இப்பயிற்சியில் சேர்ந்து தொடர்ந்து பயிற்சி செய்து வருகிறேன். இப்பயிற்சியினாலும் தினமும் நடைப்பயிற்சி செய்வதாலும் நடப்பதில் இருந்த சிரமம் குறைந்துள்ளது அத்துடன் கண்பார்வையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றமும் காணப்படுகிறது. இரவில் அதிக நேரம் விழித்திருப்பதைத் தவிர்த்து உறக்கம் வந்தவுடன் உறங்கச் சென்று இரவில் நன்கு தூங்கி வருவதால் உடலும் மனதும் முன்பிருந்ததை விடவும் அமைதியாக உள்ளன.
இந்நிலையில் சர்க்கரை வியாதி ஒரு வியாதியே அல்லவென்றும் அதனை மருந்துகள் உட்கொள்ளாமலேயே குணப்படுத்த இயலுமென்றும் தெளிவாக விளக்கும் வீடியோவை யூட்யூப் தளத்தில் கண்டேன்:
அதில் அளிக்கப்பட்ட விளக்கத்தைக் கேட்டதால் எனக்குள் ஒரு தெளிவு பிறந்தது. அதன் படி அன்றுமுதல் நான் சர்க்கரை வியாதிக்கான மாத்திரைகள் உட்கொள்வதை நிறுத்தி உணவில் மேலும் அதிக கவனம் செலுத்தினேன். இவ்வாறு மாத்திரைகள் உட்கொள்ளாமல் சுமார் 10 நாட்களுக்குப் பின்னர் ரத்ததிலும் சிறுநீரிலும் உள்ள சர்க்கரை அளவைக் காண வழக்கமான பரிசோதனையை மேற்கொண்டேன். அதிலிருந்து சர்க்கரையின் அளவு அதிக அளவில் இல்லாமல் மருத்துவர்களால் வகுக்கப்பட்ட அளவில் இருப்பது தெளிவாகத் தெரிந்தது
யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் எனும் பொன்மொழிக்கிணங்க என் நண்பர்கள் யாவரும் மற்றும் பிற யாவரும் இப்பயிற்சிகளை மேற்கொண்டு பயனடைய வேண்டுமென விரும்புகிறேன்.
வேதாத்திரி மகரிஷி அவர்களே யோகப்பயிற்சிகளைப் பின்வரும் வீடியோக்காட்சிகளில் கற்றுத்தருகிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக