வியாழன், 11 அக்டோபர், 2012

தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும்..



தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும்..

1995 ஆம் ஆண்டு பெங் ஷுளின் ( Peng Shulin ) என்ற ஒரு சீனர் மேல் ஒரு லாரி மோதியதால் அவரது உடல் இரண்டாக வெட்டப்பட்டது. இப்படி யான ஒரு பெரிய விபத்திலிருந்து அவர் உயிர் பிழைத்தது விந்தை யானது. 20 டாக்டர்கள் சேர்ந்த குழுவொன்று போராடி அவர் உயிரைக் காப்பாற்றினார்கள். அவர் தலையில் இருந்து எடுக்கப் பட்ட தோல் பரி சோதனைச் சாலையில் வளர்க்கப் பட்டு வெட்டுப்பட்ட உடல் பாகங்கள்

மூடப்பட்டன. அவர் ஆப்பரேசன் தியேட்டருக்குப் போய் வந்த எண்ணிக் கை கணக்கிலடங்காதது.

இத்தனை முயற்சிகளால் உயிர் பிழைத்த அந்த மனிதரின் உயரம் 78 cm ( இரண்டரை அடி ) மட்டுமே. அன்றிலிருந்து படுக்கையில் வாழ்ந்த இந்த துரதிர்ஷ்ட (?) மனிதர் சாதாரண வாழ்க்கை வாழ முடியுமென்று எவரும் கனவு கூடக் கண்டிருக்க முடியாது. ஆனால் அவர் தன்னம்பிக்கைக்கை இழக்கவில்லை. தனது கைகள் பலம் பெறும் வண்ணம் தேகாப்பியாசம் செய்யத் தொடங்கினார். தனது அன்றாடத் தேவைகளை முடிந்த அளவில் தானே செய்ய முனைந்தார். பல் துலக்குவது , முகங் கழுவுவது போன்றவற்றை அவரே செய்தார்.

இவரது விடா முயற்சி பற்றியறிந்த சீன புனர் வாழ்வு ஆய்வுக் கழகம் இவரை நடக்க வைக்கும் முயற்சியிலிறங்கியது. எவருதவியுமில் லாமல் நடக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட உபகரணமொன்று கண்டு பிடிக்கப்பட்டது. ஒரு முட்டை வடிவில் அமைக்கப் பட்ட ஒரு உறையினால் உடம்பின் கீழ்ப் பாகம் தாங்கப்பட்டு, அதனுடன் இரண்டு பயோனிக் கால்கள் ( bionic legs ) பொருத்தப் பட்டன. பலரையும் பிரமிக்க வைத்து இந்த மனிதர் அடியெடுத்து நடப்பதைப் படத்தில் பாருங்கள்.

பன்னிரண்டு வருடங்கள் கட்டிலில் வாழ்ந்த இந்த மனிதர் நடை பயில்வ தைப் பார்த்து வியக்காமலிருக்க முடியவில்லை. இதை மருத்துவ தொழில் நுட்ப விந்தை என்று மட்டும் கருதி விட முடியாது. அந்த மனிதர் முகத்தில் தெரியும் பிரகாசமும், தன்னம்பிக்கையும், உற்சாக மும் .......அந்த மனவலிமைதான் முக்கிய காரணமென்பதை நம் அனைவருக்கும் சொல்லாமல் சொல்கிறது.

சின்னச் சின்னத் தோல்விகளைத் தாங்க முடியாமல் துவண்டுவிடும் போதெல்லாம் இவரின் இந்த தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும் நினைவில் வரவேண்டுமென்பதற்காகத்தான் இந்தப் பதிவு..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக