செவ்வாய், 8 மார்ச், 2011

ஆண்களுக்குத் தாலி

ஆந்திராவின் ஸ்ரீ காகுளம் மாவட்டத்தில் புலரேவு என்ற கிராமம் உள்ளது. இங்குள்ள

மீனவப் பெருங்குடியினர் ஒடியாவைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள். இவர்களின்
கலாச்சார முறைமைகள், குறிப்பாக திருமணச் சடங்குகள் மற்றவர்களிடமிருந்து

முற்றிலும் வேறுபட்டதாக உள்ளன

இவர்கள் தனித் தனி திருமணங்கள் நடத்துவது இல்லை. மாறாக, ஒரு சில வருடங்களுக்கு

ஒரு முறை, ஒரே மேடையில், நூற்றுக்கணக்கான திருமணங்களைக் கூட்டாக நடத்தி
முடிக்கிறார்கள்.
மேலும், வரதட்சணை என்பது இவர்களிடம் முற்றிலும் இல்லை. ஆனாலும், மணமகனை ரூபாய்

நோட்டு மாலைகளால் அலங்காரம் செய்கிறார்கள்.
மேலும், திருமணத்தின்போது பெண்களுக்கு ஆண்கள் தாலி கட்டுவதுபோல பெண்களும்
ஆண்களுக்குத் தாலி கட்டி முடிச்சுப் போடுகிறார்கள்.
2008 ஆம் ஆண்டுக்குப் பிறகு நாளை மீண்டும் ஒரு மெகா திருமண வைபவத்திற்கு இந்தக்

கிராமம் தயாராகி வருவதால் இக்கிராமம் பற்றிய செய்தி ஊடகங்களை அடைந்துள்ளது.

.by Sabariraj Baskaran on Tuesday, March 8, 2011 at 7:27pm.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக