வெள்ளி, 2 நவம்பர், 2012

* வள்ளலார்*

* வள்ளலார்*

படுக்கும் போது இடதுகை பக்கமாக படுப்பதுடன், நான்கு மணி நேரம் தூங்க வேண்டும். அதன்பின் விழித்துக் கொண்டு நல்ல சிந்தனையுடன் செயலாற்ற வேண்டும்.
* உணவில் மாமிசம் சேர்த்துக் கொள்ளாததுடன், எப்படிப்பட்ட உணவாக இருந்தாலும் சிறிது குறைத்தே, பசிக்கும் போது மட்டும் சாப்பிட வேண்டும்.
* வேற்று நாட்டினரிடத்தும், வேற்று மதத்தினரிடத்தும் மட்டுமின்றி உயிரினங்கள் அனைத்தின் மீதும் அன்பு கொள்ள வேண்டும்.
* மனிதனாகப் பிறந்தவன், மற்றவர்களுக்கு உதவும் மனம் உடையவனாக இருக்க வேண்டும். பிறர்படும் துயரை கண்டும் காணாது இருப்பவன் எதற்கும் உதவாதவன்.
* பசித் துன்பம் ஏற்பட்டால் அறிவு அழிந்து அழிவு ஏற்படும். பசிப்பவர்க்கு தக்க உதவி செய்வது அனைவரின் கடமை.
* பொய், புறங்கூறுவது போன்ற செயல்களால் முன்னேறலாம் என நினைக்கக் கூடாது. அது ஒரு நாள் மிகப்பெரிய அழிவில் கொண்டு போய் விட்டுவிடும்.
* ஓர் உயிரைக் கொன்று மற்றோர் உயிரின் பசியை போக்குவது கடவுள் அருளுக்கு ஏற்புடையதல்ல

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக