![](https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-prn1/60796_510144285672295_1174356505_n.jpg)
மண்ணடியில் உள்ள தம்புச் செட்டித் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ காளிகாம்பாள் திருக்கோவ
ில் சுமார் 400 வருட பழம் பெருமை உடையது.
1639ஆம் ஆண்டுக்கு முன்பே விஸ்வகர்மா குலத்தினரால், இவ்வாலயம் அமைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. விஸ்வகர்மாக்கள் கோட்டையில் வைத்து வழிபட்டதால் இதற்குக் கோட்டையம்மன் என்ற பெயரும், முன்பு இக்கோவில் கடல் ஓரத்தில் அமைந்திருந்தாகவும், அங்கு செம்படவர்கள் அன்னையை செந்தூரம் பூசி வழிபட்டதால் சென்னியம்மன் என்ற பெயரும் அம்பாளுக்கு இருக்கிறது. சென்னியம்மன் குப்பமே, பின்னர் சென்னை என்றாயிற்று என்றுகூடச் சில வரலாற்றாய்வாளர்கள் கூறுகின்றனர்.
கடற்கரையருகே அமைந்திருந்த இக்கோவில் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் இப்போது கோவில் அமைந்திருக்கும் இடத்திற்கு மாற்றி அமைக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.
காளிகாம்பாள் கோவில் சரித்திரப் பிரசித்தி பெற்றது. 1667ஆம் ஆண்டு, மராட்டிய மன்னர், சத்ரபதி சிவாஜி, ஒரு பெரும் போருக்குப் போகும் முன், இக்கோவிலுக்கு வந்து, அம்மன் சிலையின் முன்பு தன் வாளை வைத்து வணங்கியிருக்கிறார். பின் அப்போருக்குச் சென்றவர், பெரும் வெற்றியும் பெற்றிருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது.
மகாகவி பாரதியார் சுதேசமித்திரனில், பணி புரிந்துகொண்டிருந்தபோது பிராட்வேயில் தங்கியிருந்தார். அப்போது அடிக்கடி இக்கோவிலுக்கு வழிபட வருவாராம். ‘‘யாதுமாகி நின்றாய் காளி’’ என்ற அவரது பாடல் இந்தக் கோவிலில் உள்ள காளிகாம்பாளைப் பற்றிப் புனையப்பட்ட பாடல்தான்.
1639ஆம் ஆண்டுக்கு முன்பே விஸ்வகர்மா குலத்தினரால், இவ்வாலயம் அமைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. விஸ்வகர்மாக்கள் கோட்டையில் வைத்து வழிபட்டதால் இதற்குக் கோட்டையம்மன் என்ற பெயரும், முன்பு இக்கோவில் கடல் ஓரத்தில் அமைந்திருந்தாகவும், அங்கு செம்படவர்கள் அன்னையை செந்தூரம் பூசி வழிபட்டதால் சென்னியம்மன் என்ற பெயரும் அம்பாளுக்கு இருக்கிறது. சென்னியம்மன் குப்பமே, பின்னர் சென்னை என்றாயிற்று என்றுகூடச் சில வரலாற்றாய்வாளர்கள் கூறுகின்றனர்.
கடற்கரையருகே அமைந்திருந்த இக்கோவில் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் இப்போது கோவில் அமைந்திருக்கும் இடத்திற்கு மாற்றி அமைக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.
காளிகாம்பாள் கோவில் சரித்திரப் பிரசித்தி பெற்றது. 1667ஆம் ஆண்டு, மராட்டிய மன்னர், சத்ரபதி சிவாஜி, ஒரு பெரும் போருக்குப் போகும் முன், இக்கோவிலுக்கு வந்து, அம்மன் சிலையின் முன்பு தன் வாளை வைத்து வணங்கியிருக்கிறார். பின் அப்போருக்குச் சென்றவர், பெரும் வெற்றியும் பெற்றிருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது.
மகாகவி பாரதியார் சுதேசமித்திரனில், பணி புரிந்துகொண்டிருந்தபோது பிராட்வேயில் தங்கியிருந்தார். அப்போது அடிக்கடி இக்கோவிலுக்கு வழிபட வருவாராம். ‘‘யாதுமாகி நின்றாய் காளி’’ என்ற அவரது பாடல் இந்தக் கோவிலில் உள்ள காளிகாம்பாளைப் பற்றிப் புனையப்பட்ட பாடல்தான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக