வெள்ளி, 21 டிசம்பர், 2012

திருமந்திரம்: பெரியாரைத் துணைக்கோடல்

திருமந்திரம்: பெரியாரைத் துணைக்கோடல்

தார்சடை யான்றன் தமராய் உலகினிற்
போர்புக ழானெந்தை பொன்னடி சேருவர்
வாயடை யாவுள்ளந் தேர்வார்க் கருள்செய்யுங்
கோவடைந் தந்நெறி கூடலு மாமே.

நீண்ட சடையும் உலகம் முழுதும் போர்த்த புகழை உடைய சிவபெருமானின் திருவடி சரணம் அடைந்து உள்ளம் தெளிவடைபவரிடத்துச் அருள்புரியும் சிவபெருமானை அடையும் திருநெறியை பின்பற்றலாமே! கூடலாமே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக