திங்கள், 4 ஏப்ரல், 2011

அணுசக்தி மறுப்பு நாள்


    ஏப்பிரல் 11 அன்று இந்தியா அணுசக்தி மறுப்பு நாளைக் கொண்டாடவிருக்கிறது. அணுசக்தி வேண்டுமா வேண்டாமா என்பதில் ஒரு முடிவு எடுக்காதவர்களும் கூட ஜப்பானிய விபத்துக்குப் பின்னர் தாம் இருக்கும் ஊருக்கு அருகில் உள்ள அணு உலைகள் வெடித்தால் எழும் கதிரியக்கத்தை எப்படி எதிர்கொள்வது என்று சிந்தித்துப் பார்க்க வேண்டிய நாள். அணுமின் நிலையங்களை இயக்குபவர்கள் அவற்றை முறையாக நடத்துகிறார்களா என்று கண்காணிப்பது பற்றிச் சிந்தித்துப் பார்க்க வேண்டிய நாள். 30 அல்லது 40 ஆண்டு ஆயுள் உள்ள அணுமின் நிலையங்களைக் கட்டித்தான் நமது மின்சாரத் தேவைகளை நிறைவேற்ற வேண்டுமா என்று சிந்திடுப் பார்க்க வேண்டிய நாள். இருக்கும் அணு மின் நிலையங்களையே என்றென்றும் கட்டிக் காக்கத் திராணியற்ற நாம் மேன்மேலும் அணுமின் நிலையங்களைக் கூட்டிக் கொண்டு போவதுதான் அறிவுள்ள செயலா என்று சிந்தித்துப் பார்க்க வேண்டிய நாள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக